சென்னை போலீஸாருக்கு அவசர உதவி கோரி 80 நிமிடத்திற்கு ஒரு அழைப்பு!

குற்றம் தொடர்பான பதிவு குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தமிழ்நாடு காவல்துறையில் 80 நிமிடத்திற்கு ஒருமுறை குற்றம் தொடர்பான அவசர அழைப்பு பதிவு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரத்தின்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் தொடர்பான அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுவதில் தேசிய அளவில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தை வகிக்கிறது. 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. 2009-ஆண்டு தமிழ்நாட்டில் 3080 குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2010-ம் ஆண்டு 6,351 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லிதான் அதிகம்
நாட்டின் தலைநகரகம் டெல்லியோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் கவலைப்படக்கூடிய விசயமாக தெரியவில்லை. ஏனெனில் டெல்லியில் 25 செகன்டுக்கு ஒரு முறை குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுகிறதாம். அங்கு மட்டும் 2010 –ம் ஆண்டு 19 லட்சம் குற்றம் தொடர்புடைய அழைப்புகள் பதிவாகியுள்ளன.
கிரேட்டர் சென்னையில் உள்ள 13 ஆயிரம் காவல்துறையினர் 1,200 குற்றங்களை கண்டுபிடித்து அதற்கு தீர்வும் கண்டுள்ளனர். அதேசமயம் 20 சதவிகிதம் அழைப்புகள் விளையாட்டுத்தனமாக வந்தவையாகும். அவை, அவசர போலீஸ் 100 ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை
காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர அழைப்பு எண்ணில் போன் செய்து விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்யப்பட்ட தகவல் ஒலிபரப்படுகிறது. இருப்பினர் ஒருசிலர் விளையாட்டுத்தனமாக அவசரபோலீஸ் 100 ல் போன் செய்து விளையாடுவதாக தெரிவித்துள்ளார் கிரேட்டர் சென்னையின் காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி.
ஜூலை மாதத்தில் மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விளையாடிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிறமாநிலங்களோடு ஒப்பிடுகையில் சென்னையில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications