For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்: ஜெயலலிதா போக்கு மாறவேவில்லை- பாமக நிறுவனர் ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 12,000 மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தன்மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது தெரிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை திடீர் என்று பணி நீக்கம் செய்தது கண்டனத்திற்குரியது. கடந்த 2003ம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 2 லட்சம் அரசு ஊழியர்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரே இரவில் பணிநீக்கம் செய்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

தற்போது அவர் திடீர் என்று மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு 12,000 மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

English summary
PMK founder Ramadoss has condemned CM Jayalalithaa for dismissing makkal nala paniyalargal without prior notice. He has told that Jayalalithaa won't change her attitude.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X