கிரிக்கெட்டைத் தாண்டி பிற விளையாட்டுக்கள் பக்கம் திரும்பத் தொடங்கி விட்டனர் இந்தியர்-ஆனந்த்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விளையாட்டுத் துறை சமீப ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது என்பது எனது கருத்து. எப் 1 கார்ப்பந்தயத்திற்குக் கிடைத்த ஆதரவின் மூலம் இதை அறியலாம். கிரிக்கெட் போட்டிக்குக் கூடும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் டெல்லியில் கூடியதை மக்கள் பார்த்தனர்.
எப்1 என்றில்லை, பல விளையாட்டுக்களின் மீதும் மக்கள் ஆர்வம் திரும்பத் தொடங்கி விட்டது. ஏற்கனவே செஸ் மீதும் மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதை மேலும் அதிகரிக்க முயல வேண்டும் என்றார் ஆனந்த்.
அடுத்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியில் தனது பட்டத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் ஆனந்த் தற்போது மும்முரமாக உள்ளார்.அந்தத் தொடரில் அவர் இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்ட்டை சந்திக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications