விமானதளத்தை 15 நாட்களுக்குள் யு.எஸ். காலி செய்ய வேண்டும்: மேலும் 'டைம்' கொடுக்க சர்தாரி மறுப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க்காவின் சிஐஏ, ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை ட்ரோன் ஏவுகணைகளை வீசித் தாக்க பயன்படுத்தி வரும், ஷம்சி விமானதளத்தை காலி செய்ய பாகிஸ்தான் அரசு கொடுத்துள்ள 15 நாள் கெடுவை நீட்டிக்க அநநாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மறுத்துவிட்டார்.
சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும் இதனால் பெரும் கடுப்பாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைத்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத்தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் திடீர் என்று நேற்று பாகிஸ்தான் வந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் சர்தார் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷம்சி விமானதளத்தை காலி செய்ய அமெரிக்காவுக்கு அளித்துள்ள 15 நாள் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சர்தாரி மறுத்து விட்டார்.
நஹ்யானுடனான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ஷம்சி விமானதளத்தை காலி செய்வது பற்றி குறிப்பிடவில்லை.
பாகிஸ்தான் அரசு கடந்த 1992ம் ஆண்டு ஷம்சி விமானதளத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் பரம்பரையினருக்கு லீசுக்கு விட்டது. 9/11 தாக்குதல் நடந்ததில் இருந்து அந்த விமானதளத்தை அமெரிக்கா பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்தது.
இந்த சந்திப்பின் போது நஹ்யான் 15 நாள் கெடுவை நீட்டிக்குமாறு சர்தாரியை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியும் அவர் மசியவில்லை என்று கூறப்படுகின்றது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications