2ஜி.. ப.சிதம்பரம்..: சு.சாமியின் கோரிக்கையை ஏற்றது சிபிஐ நீதிமன்றம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரமும் கூட்டுச் சதி செய்துள்ளார். அவரும் முன்னாள் அமைச்சர் ராசாவும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது சாமியின் கோரிக்கையாகும்.
இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சாமி கோரியிருந்தார். அதை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ, சாமியிடம் அளித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க முன்னாள் நிதித்துறை இணைச் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார் (இவர் இப்போது விளையாட்டுத்துறை செயலாளராக உள்ளார்), சிபிஐ இணை இயக்குனர் அஸ்வதி ஆகியோரையும் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சாமி கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. ஆனால், வரும் 17ம் தேதி சுப்பிரமணிய சாமி முதலில் சாட்சிக் கூண்டில் ஏறி குல்லார் மற்றும் அஸ்வதியிடம் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு விளக்கம் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றால் மட்டுமே, குல்லார் மற்றும் அஸ்வதியை இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்படுவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications