முல்லை பெரியாறு தொடர்பான எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது - கேரள டிஜிபி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக இனி எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று கேரள டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக குமுளி எல்லையில் கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது தமிழக வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தினால் தமிழக - கேரள எல்லையில் பதற்றம் நிலவுகிறது
இந்நிலையி்ல் கேரள டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் புதன்கிழமையன்று முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டார். தமிழக கேரள எல்லை பகுதியில் பாதுகாப்பை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
குமுளியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. தற்போது கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை சாவடியில இனி மேல் எந்த வாகனமும் தடுத்து நிறுத்தப்பட மாட்டாது. கேரளாவுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த சிரமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் அச்சமின்றி சபரிமலைக்கு வந்து செல்லலாம். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இனிமேல் எந்த போராட்டத்துக்கு்ம் அனுமதி இல்லை என்றார்.
அணையை சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தவித்து வரும் மலையாளிகளை பாதுகாப்பாக கேரளாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபியிடம் உதவி கோரப்பட்டுள்ளத என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications