மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை வழிமறுத்து நிறுத்திய சிங்களக் கடற்படைக் கும்பல், 5 மீனவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படைக் கும்பம் தாக்கி வருவது அன்றாட நிகழ்ச்சியாக விட்டது. இதைத் தடுக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காமல் உள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைவர்கள் கேட்டால், நமது மீனவர்கள் எல்லைத் தாண்டிப் போவதால்தானே சுடுகிறார்கள் அடிக்கிறார்கள் என்று வித்தியாசமாக பதிலளிக்கிறார் பிரதமர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் ஊடுறுவும் நமது மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுடுவதில்லை.அதைபோல நமது கடல் பகுதியில் ஊடுறுவும் பாகிஸ்தான் மீனவர்களை நாமும் சுடுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தொடர்ந்து ஊடுறுவிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களையும் இந்தியக் கடற்படையும் சரி, கடலோரக் காவல் படையும் சரி சுடுவதில்லை. பிறகு ஏன் இந்திய மீனவர்களை மட்டும் இலங்கை சுடுகிறது, அதை ஏன் மத்திய அரசு தட்டிக் கேட்பதில்லை என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இதுவரை பதில் இல்லை.
இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர் இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து 702 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த கும்பல் அங்கு வந்தது. தமிழக மீனவர்களை மறித்த அக்கும்பல், ஒரு படகில் ஏறிஅதில் இருந்த ஐந்து மீனவர்களையும் தாககியது.
பின்னர் மீனவர்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கைப்பற்றி சேதப்படுத்தியது. பின்னர் படகையும் சேதப்படுத்தி விட்டு கிளம்பிப் போனார்கள் அந்த ரவுடிப் படையினர்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications