For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏதோ உள்நோக்கத்துடன் கேரளா பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகிறது-அன்பழகன்

Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் கேரள அரசு பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் இன்றுகாலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தலைமை வகித்து அன்பழகன் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்க்கை நடந்து வருகிறது.

ஆனால், கேரளா ஏதோ ஒரு நோக்கத்துடன் மக்களுக்கு தீமை ஏற்படும் எனவும், அணை உடைந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சட்டசபையை பயன்படுத்தி தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

English summary
Kerala has some unidentified motive behind Mullaiperiyar issue said DMK General secretary Anbalagan. He led the fast protest in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X