தன்னுயிர் நீத்து 3 தமிழர் உயிர் காக்கப் போராட்டம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டையை நிறைவேற்ற இந்த ஆண்டு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஆர்த்தெழுந்த தமிழர் பட்டாளம் தனது பெரும் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த தேதியை தள்ளிப் போட வைத்துள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதி இந்த மூன்று பேரும் தாக்கல் செய்திருந்த கருணை மனு நிராகரிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது. இதையடுத்து அவர்களைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. வரலாறு காணாத வகையில் இந்தப் போராட்டங்களின் துக்க உச்சமாக காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம் தளிர் ஆகஸ்ட் 27ம்தேதி தீக்குளித்து உயிர் நீத்து உலகத் தமிழர்களை துக்கத்தில் மூழ்கச் செய்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெடித்த இந்தப் போராட்டத்தின் பின்னணியில், சென்னை உயர்நீதிமன்றம், மூன்று தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
தமிழக சட்டசபையிலும், முதல்வர் ஜெயலலிதா மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
ஊசலாடி வரும் இந்த மூன்று தமிழர்களின் வாழ்வைக் காக்க தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தூக்குக் கயிறை தமிழர்கள் வெல்வார்களா அல்லது கயிறு அவர்களை வெல்லுமா. காலம் பதில் சொல்லும்...
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications