முல்லைப் பெரியாறு அணை : ஐவர் குழுவிடம் தமிழகம் , கேரளா அறிக்கை தாக்கல்

ஐவர் குழு விசாரணை
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கும்படி நீதிபதி ஆனந்த் கேட்டு இருந்தார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஆர்.டி.சிங் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
அணை வலுவாக உள்ளது
முல்லைப்பெரியாறு அணை வலு இழந்து விட்டதாகவும், இதனால் அணை உடைந்து விடும் ஆபத்து இருப்பதாகவும், கேரளா தவறான தகவல்களை கூறி வருகிறது. தற்போதைய அணை, புதிய அணை போன்று பலமாக இருக்கிறது. இந்த அணை உடையக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே இதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தனது மனுவில் கூறி இருக்கிறது.
உரிமை கேரளாவுக்கே
ஆனால் புதிய அணை மட்டுமே தீர்வாகும் என்று கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முல்லைப்பெரியாறு அணை பலம் இழந்து விட்டது. எனவே புதிய அணை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. புதிய அணையே இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். புதிய அணையின் உரிமை கேரளாவிடமே இருக்கும்.
ஆனால் புதிய அணையின் நீர்பங்கீட்டை கேரளா, தமிழ்நாடு, மத்திய அரசு பிரதிநிதிகள் இணைந்த சுதந்திரமான குழு நிர்வகிக்கலாம். இதை கேரளா ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு கேரளா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு மாநில அறிக்கைகளை பெற்ற நீதிபதி ஆனந்த், அடுத்த கூட்டம் 24, மற்றும் 25-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். ஐவர் குழு நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஐவர் குழுவிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னரே ஐவர் குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications