ஜார்க்கண்டில் சரக்கு, பயணிகள் ரயில்கள் மோதல்: 4 பேர் பலி, 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் திப்ருகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற சரக்கு ரயிலும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஜார்க்கண்ட் மாநிலம் சாகெப்கன்ஞ் மாவட்டத்தின் கான்பூரா ரயில் நிலையத்தில் மோதிக் கொண்டன. இதில் பிரம்மபுத்ரா ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வேத் துறை செய்தித் தொடர்பாளர் அனில் சாக்சேனா தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications