For Daily Alerts
Just In
சசி ஆதரவாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஜெ. கல்தா!
திருநெல்வேலி: அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் சுதா கே.பரமசிவன் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் சசிகலா ஆதரவாளர் என்பதாலே அவர் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரரத்தில் கூறப்படுகின்றது.
Comments
English summary
CM Jayalalithaa has removed former minister Nainar Nagndran from Nellai Dist ADMK secretary post
Story first published: Wednesday, January 11, 2012, 11:17 [IST]