பரமக்குடியில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் ராமேஸ்வரம் ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பரமக்குடி: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.
மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாசஞ்சர் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. ரயில் பரமக்குடியில் நின்றபோது திடீரென ஒரு கும்பல் ஓடி வந்து ரயிலின் கடைசிப் பெட்டியில் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் தீப்பெட்டி பற்றி எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும், போலீஸாரும் விரைந்து வந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.