ஈரான் அணு விஞ்ஞானி கேஸ் குண்டு வீசி படுகொலை: இஸ்ரேல் உளவுப் பிரிவு கைவரிசை?

முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.
தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக் காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications