இந்தோனேசியாவின் அசே பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: பூகம்ப நாடான இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலையில் 71. ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
அசே மாகாணத்தின் மெலுபோ என்ற இடத்திற்கு தென் மேற்கே, பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
பந்தா அசே மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அசே பகுதியின் கடலோரப் பகுதி மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். கடுமையான கடல் காற்றையும் அவர்கள் பார்த்துப் பயந்தனர்.
பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பூகம்பத்தைத் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். உலீ லியூ என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.












Click it and Unblock the Notifications