நில அபகரிப்பு வழக்கு: எதியூரப்பா முன் ஜாமீன் மனு மீது இன்று விசராணை
பெங்களூர்: நில அபகரிப்பு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் சேமண்ணா ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
ரவி கிருஷ்ணாரெட்டி என்பவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் சோமண்ணா ஆகியோருக்கு எதிராக நில மோசடி புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், சோமண்ணா பெங்களூர் கெங்கேரி ஹோப்லியில் உள்ள நாகதேவனஹல்லியில் 22 குண்டா நிலத்தை அபகரித்து தனது மனைவி சைலஜா நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவர் நிலத்தை அபகரிதத் போது எதியூரப்பா தான் முதல்வராக இருந்தார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் எதியூரப்பா, சோமண்ணா மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 17ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
ஏற்கனவே இன்னொரு வழக்கில் எதியூரப்பா கைதாகி சிறைக்கச் சென்று ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்படத்தக்கது.












Click it and Unblock the Notifications