கலப்பட தயிர்- நெல்லை பால் கம்பெனி, மேலாளர்கள் மீது வழக்கு
நெல்லை: பாளையில் கலப்பட தயிர் தயாரித்த பால் கம்பெனி மற்றும் அதன் மேலாளர்கள் 2 பேர் மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பால் கம்பெனி விற்பனை செய்யும் பாக்கெட் தயிரியின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினார். அந்த பால் கம்பெனி விற்பனை செய்த தயிர் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினார்.
அப்போது தயிரில் கொழுப்பு மற்றும் கொழுப்புச்சத்து அல்லாத பிற சத்துகள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தயிர் பாக்கெட்டுகள் மீது குறிப்பிடப்பட வேண்டிய சத்து விபரம் அச்சிடப்படவில்லை. எனவே கலப்பட தயிர் விற்பனை செய்த டெய்ரி மேலாளர் காஜா முகைதீன், அதை தயாரித்த பால் கம்பெனி, ப்ளான்ட் மேலாளர் ராஜா மதனகோபாலன் ஆகியோர் மீது உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சென்னை உணவு கலப்பட தடை சட்ட இயக்குனருக்கு உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பரிந்துரை செய்தார்.
இதற்கான அனுமதி கிடைத்ததை அந்த பால் கம்பெனி மற்றும் அதன் மேலாளர்கள் 2 பேர் மீது நெல்லை நீதிமன்ற நடுவர் மன்றம் எண் 1ல் உணவு கலப்பட தடை சட்டத்தின்கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications