ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் மற்றும் சோனிபட் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை 4.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
நில அதிர்வுகள் மிகவும் லேசாகத் தான் இருந்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications