புதிய ஜே.வி.பியில் முன்னாள் விடுதலைப் புலிகள்?
கொழும்பு: இலங்கை இடதுசாரி இயக்கமான ஜே.வி.பியின் புதிய குழுவுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவது அதிகரித்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் 1940 மற்றும் 50களில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தது. சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வந்தனர். பேரினவாத சிந்தனை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலத்தில் வலதுசாரி அரசியல் கட்சிகளான சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்றவையே தீர்மானிக்கும் அரசியல் சக்திகளாக வலம் வந்தன.
இருப்பினும் 1960களில் உதயமான இடதுசாரி ஆயுத இயக்கமான ஜே.வி.பி இலங்கை அரசியல் கட்சிகளுக்கு பிரதான எதிரியாக இருந்தது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை கைப்பற்றி இடதுசாரி சித்தாந்த நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஜே.வி.பி பயணித்தது.
பின்னர் பேரினவாதம் பேசி இலங்கை இனப்படுகொலை வரலாற்றில் முக்கியத்துவம் வகித்தது. ஜே.வி.பி.யின் ஆயுதப் பயணம் முடிவுக்கு வந்து வாக்கு வங்கி அரசியலுக்குள் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறது
மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கியப் பங்காற்றிய ஜே.வி.பி, கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்த பிளவுகளை சந்தித்தது.
ஏற்கெனவே விமல் வீரவன்ச தலைமையிலான ஒரு குழு மகிந்த ராஜபக்சவுடன் ஐக்கியமாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்சவுக்கு எதிராக கிளர்ச்சிக் குழு ஒன்று உருவெடுத்தது.
நாடாளுமன்ற அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தது தவறு என்ற வாதத்தை முன்வைத்து கிளர்ச்சியின் மூலமே அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று புதிய ஜே.வி.பி. பிரகடனம் செய்து வருகிறது. இந்த புதிய ஜே.வி.பி.யுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணந்து வருவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்ச இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
புதிய ஜே.வி.பி. குழுவும் "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து செயல்படுவது உண்மைதான் என ஒப்புக் கொள்வதாக" அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் புதிய ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் புதிய ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களான வீரராஜு மற்றும் முருகானந்தம் ஆகியோர் திடீரென காணாமல் போயுள்ளனர். ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாலேயே இருவரும் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தைக் கைப்பற்ற ரோக விஜவீர தலைமையிலான ஜே.வி.பி. முயன்று பல ஆயிரம் இளைஞர்களை பலி கொடுத்த வரலாறும் இலங்கையில் நடந்தேறியிருக்கிறது.
இலங்கை அரசியலில் புதிய ஜே.வி.பியும் முன்னாள் புலிகளும் கை கோர்க்கும் அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது வரலாற்றுக்கே வெளிச்சம்!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications