மா.செ. கூட்டம், உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறது திமுக
சென்னை: மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டங்களை பிப்ரவரி 2ம் தேதி கூட்டியுள்ளது திமுக.
இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2.2.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
கழக அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் அமைப்பு முறை தொடர்பான சட்டதிட்டத் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தலும், புதுப்பித்தலும் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளது.
திமுகவில் கனிமொழிக்குப் புதிய பதவி கொடுக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. அதுகுறித்து முக்கியமாக விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் கனிமொழிக்குப் பதவி தருவதற்கு ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications