இன்று முதல் மீண்டும் 'தனிக்குடித்தனம்'-சட்டசபையில் என்ன செய்யப் போகிறது தேமுதிக?

தேமுதிக, யாருடனும் சேராமல் தனியாக இயங்கி வந்தபோது மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்று சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் எப்போது கூட்டணி அரசியலில் நுழைந்ததோ அன்றே அதன் செயல்பாடுகள் குலைந்து போய் விட்டன. தற்போது தேமுதிகதான் தமிழகத்தின் எதிர்க்கட்சியாகும். ஆனால் அதன் செயல்பாடுகள் பல முக்கியப் பிரச்சினைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. இதனால் மக்கள் மத்தியில் தேமுதிக மீதான அவ நம்பிக்கை அதிகரித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் கூட்டணி நாளடைவில் முறிந்து போய் விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கேட்ட இடங்களைக் கொடுக்க அதிமுக தயாராக இல்லாததால், தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது தேமுதிக.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சித்துப் பேசி வருகிறார் விஜயகாந்த். இந்த நிலையில் இன்று சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தில் தேமுதிக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இருந்தபோதே தேமுதிக எம்.எல்.ஏக்களை அதிமுகவினர் வித்தியாசமாகத்தான் பார்த்து வந்தனர். சட்டசபையில் முன்பு ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. பேசுகையில், தேமுதிக எங்களுக்குப் பாடம் நடத்தக் கூடாது என்று பகிரங்கமாக கண்டித்தார் முதல்வர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போதாவது தேமுதிகவினர் ஆக்கப்பூர்வமாக பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார், என்ன பேசப் போகிறார், எப்படிப் பேசப் போகிறார்,முக்கியப் பிரச்சினைகளில் அவர் அணுகப் போவது எப்படி என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
தேமுதிக தனித்து விடப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், சிபிஎம் எம்.எல்.ஏக்கள் துணை நிற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தேவைப்பட்டால் சிபிஐ எம்.எல்.ஏக்களும் கூட துணைக்கு வருவார்கள். தங்களுக்குப் பயன்படுவதாக இருந்தால் திமுகவும் கூட தேமுதிகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications