"கிங்பிஷர் ஏர்லைன்ஸை மூடும் பேச்சுக்கே இடமில்லை'' - நிர்வாகம் அறிவிப்பு

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 'கிங் பிஷர்' விமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கிவிள்ளது. விமானிகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்து, அவர்கள் வேலைக்கு வருவதில்லை. இதையடுத்து 'கிங் பிஷர்' விமான நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இதை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன துணைத் தலைவர் பிரகாஷ் மிர்புரி கூறுகையில், "வங்கிக் கணக்குகள் முடக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. இதனால் சகஜ நிலை திரும்பி விட முடியும். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிடும்'' என்றார்.
ஆனால், பணிக்கு திரும்பாவிட்டால், விமான நிறுவனத்தை மூடப்போவதாக தங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் எச்சரித்துள்ளதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications