சென்னையில் ஒரே வீட்டில் சிக்கிய ரூ. 7 கோடி- ஹவாலாவா அல்லது சங்கரன்கோவில் பணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு வீட்டில் ரூ. 7 கோடி அளவுக்கு மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. இந்தப் பணம் ஹவாலா பணமா அல்லது சங்கரன்கோவிலுக்கு அனுப்பப்படவிருந்த பணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீஸார் நேற்று இரவு அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ. 7 கோடி பணம் சோதனையில் சிக்கியது.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் நாகராஜனை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இது ஹவாலா பணமா என்று போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த பணமாகவும் இது இருக்கலாம் என்ற புதிய சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒரே வீட்டில் ரூ. 7 கோடி அளவுக்குப் பணம் குவியலாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+