பபுவா நியூகினியாவில் 6.7 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி
கொரோகா: பபுவா நியூகினியாவில் இன்று காலை 8.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியா அருகே உள்ள பபுவா நியூகினியாவில் இன்று காலை 8.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7க பதிவாகியுள்ளது. தலைநகர் கொரோகாவில் இருந்து 64 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இது உணரப்பட்டது. மேலும் போர்ட் மோர்ஸ்பியிலும் அதிர்வுகள் உணரப்பட்டது.
பூமிக்கு அடியில் சுமார் 100 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் பபுவா நியூகினியா அமைந்துள்ளது. கடந்த வாரம் கூட அந்நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் பகுதியில் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
கடந்த 1998ம் ஆண்டு பபுவா நியூகினியாவின் வடகிழக்கு பகுதியான அய்டேப் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,000 பேருக்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications