டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா மீண்டும் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

Sheila Dixi
டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதான ஊழல் புகார் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிமன்றம், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

புகார் என்ன?

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு குறைந்த விலையில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், குறைந்த விலையிலான 60,000 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தேர்தல் முடிந்ததும் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்..

ஆனால் தேர்தல் முடிந்து, ஷீலா தீட்சித் மீண்டும் முதல்வரான பிறகும், உரியவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி சிலர் விசாரணையில் இறங்கிய போது, ஷீலா தீட்சித் சொன்னது போல, வீடுகள் எதுவும் கட்டப்படவில்லை. உண்மையை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் என்பது தெயவந்தது.

ஊழல்

மேலும், அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டத்தில் ஊழல்கள் நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சிலர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுத்த லோக் ஆயுக்தா நீதிபதி மன்மோகன் சரீன், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், குறைந்த விலை அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுவதற்கு முன்பே, 60 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு

செய்யும் நிலையில் இருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் ஊழலும் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நீதிபதி அனுப்பிய பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதுமட்டு மின்றி, டெல்லி அரசின் சம்பந்தப்பட்ட துறையிடம், இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்து

கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டும் கூறிவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்.

மீண்டும் பரிந்துரை

இந்நிலையில் ஷீலா தீட்சித் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தன்னுடைய முந்தைய நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, லோக் ஆயுக்தா மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. மறு ஆய்வு கோரும் சிறப்பு அறிக்கையை டெல்லி ஆளுநர் தேஜிந்தர் கன்னா மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+