நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான சாத்தியம் இல்லை என்கிறார் சரத்யாதவ்!
லக்னோ: நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்குத் தயாராகுமாறு தமது கட்சியினருக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக இப்போது கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலை உடனே சந்தித்தால் இதன் பாதிப்புகள் இருக்கும் என்று அக்கட்சிக்குத் தெரியும். இடைத்தேர்தல் தொடர்பாக முலாயம் எப்படிக் கூறினார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
லோக்பால் மசோதாவைப் பொறுத்தவரையில் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உண்டு. இதுபற்றி விவாதித்தே இறுதி முடிவெடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications