2 இத்தாலியர்களை விடுவிப்பதில் சிக்கல்- அரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தினர் தூதர்கள்
புவனேஸ்வர்: ஒரிசாவின் லஷ்மிபூர் எம்.எல்.ஏ. கடத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே கடத்தப்பட 2 இத்தாலியர்களை மீட்பது தொடர்பாக அரசுடன் தாங்கள் நடத்திய வந்த பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்துவதாக மாவோயிஸ்டுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் சார்பாக ஒரிசா மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய தண்டபாணி மொகந்தி மற்றும் சர்மா ஆகியோர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகள் மற்றும் அரசு தரப்பினரும் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வை மாவோயிஸ்டுகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கஞ்சம்-கந்தமால் மாவட்ட எல்லையில் கடந்த மார்ச் 14-ந் தேதியன்று 2 இத்தாலியர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மனித உரிமை ஆர்வலர்களான சர்மாவையும் மொகந்தியையும் மாவோயிஸ்டுகள் நியமித்திருந்தனர். மாவோயிஸ்டு தூதர்களுடன் கடந்த 2 நாட்களாக ஒரிசா அரசும் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் இது இப்பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டார்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த 3-வது சுற்று பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications