'எலக்ஷன் வேலை நல்லா பாத்தீங்க!'- போலீசுக்கு பாராட்டு, ரூ.50 லட்சம் சிறப்பு படி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணியாற்றிய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 2500 போலீசாருக்கு ரூ.50 லட்சம் தேர்தல் சிறப்பு படி வழங்க (அலவன்ஸ்) உத்தவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6 நாட்கள் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 66 காவல் நிலையங்கள், 4 புறக்காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் மற்றும போலீசார், பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீசார் என 2500 பேர் பணிபுரிந்தனர்.
சிறப்பு அலவன்ஸ்
சிறப்பு இன்ஸ்பெக்டர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 6 நாட்கள் வரை ரூ.2100ம், போலீசார் முதல் ஏட்டுகள் வரை நாள் ஒன்றுக்கு ரூ.275 வீதம் 6 நாட்களுக்கு ரூ.1650ம், தேர்தல் சிறப்பு படியாக மொத்தம் ரூ.50 லட்சம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தல் சிறப்பு படியை அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று எஸ்பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications