அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் போல செயல்படக்கூடாது: ஜெ

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் குறித்து அதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது குறித்து சில எம்எல்ஏக்கள் கூறுகையில், சட்டசபையில் பெரும்பான்மை கட்சியாக இருக்கிறோம். எதிர்க் கட்சிகள் ஆத்திரமூட்டும் வகையில் பேசலாம். இதற்கு பதிலளிப்பதாக நாமும் ஆத்திரமடையக் கூடாது.
அதிமுக எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் போல செயல்படக்கூடாது. எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்போடு நாம் பதில் சொல்ல வேண்டும். அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் முன்பு நான் பதில் சொன்னேன். இனிமேல் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
பிரச்சனைகள் பற்றி பேசும் போதும், எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்கும் போதும், எம்எல்ஏக்கள் அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேறி வரக் கூடாது.
அ.தி.மு.க எம்எல்ஏக்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் வரக் கூடாது. அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் எம்எல்ஏக்கள் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார் என்றனர்.












Click it and Unblock the Notifications