வர்த்தக நிறுவனங்களுக்கான கேஸ் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்: வணிகர் பேரமைப்பு
சென்னை: வர்த்தக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டால் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, பொதுச்செயலாளர் கே.மோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஓட்டல்கள், டீ, டிபன் கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகள் நடத்தும் வணிகர்கள் திருமண விழாக்களை நடத்துவோர் உள்ளிட்ட அனைவரும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை விட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ரூ.400 அளவில் அரசு மான்யம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கணக்கிட்டாலும் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சிலிண்டர் விலை ரூ.1000க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அவ்வப்போது விலையை உயர்த்தி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படுகின்றது என்று எண்ணைய் நிறுவனங்களால் காரணம் கூறப்படுகின்றது. தற்போது 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,667ல் இருந்து 1,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மிக அதிகம் ஆகும்.
எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு இப்பிரச்சனையில் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு தடை விதித்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த விலை உயர்வால் ஹோட்டல், டீ, டிபன் கடைகள் நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மேலும் இந்த கேஸ் சிலிண்டர்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
சிறிய, நடுத்தர வணிகர்கள் பயன்பெறும் வகையில் வணிக ரீதியான சிலிண்டரின் விலையை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications