டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு' விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை- அரசு மறுப்பு

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய சிபிஎம் உறுப்பினர் செளந்தரராஜன், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இவ்வளவு பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் இத்தனை பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு கடையிலும் சராசரியாக எவ்வளவு விற்பனையாகும் என்று கணக்கு உள்ளது. அந்த விற்பனை அளவு குறைந்தால், தவறு நடக்கிறது என்று அர்த்தம்.
எனவே, அந்த அளவு குறையாமல் விற்பனை செய்ய வேண்டும் என்று மட்டுமே வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம், போலி மது பாட்டில்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரி செலுத்தாமல் கடத்தி வரப்படும் சரக்குகள், நமது கடைகளுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மற்றபடி, கூடுதலாக விற்பனை செய்து சாதனை படைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மகாவீரர் ஜெயந்தி-டாஸ்மாக் கடைகள் மூடல்:
இந் நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications