ஜெனிவா தீர்மானத்தை செயல்படுத்தாவிட்டால் இலங்கை தனிமைப்படுத்தப்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் இறுதிப் போரின் போது படையினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த தவறினால் ஜெனீவாவில் ஆதரித்த நாடுகளின் ஆதரவையும் இலங்கை அரசு இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் கூறியதாவது:
1988-89 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பேசிய மகிந்த ராஜபக்ச, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நரகத்திற்கு செல்லவும் தயாராக இருப்பதாக கூறினார். அப்போது அவருக்கு நான்தான் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தேன்.
தற்போது அதே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் பலன் எதுவுமில்லை. இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 வாக்குகளுடன் நிறைவேறியது.
அதேநேரம் தீர்மானத்துக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் வாக்களித்திருந்தன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும்கூட இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தான் கூறியிருக்கின்றன. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறினால் இந்த 15 நாடுகளின் ஆதரவையுமே இலங்கை இழந்துவிடும். இதனால் ஜெனிவா தீர்மானத்தைப் பின்பற்றி ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்றார் அவர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications