கோடையிலும் குற்றாலத்தில் கொட்டும் நீர்- குளுமையில் திளைக்கும் சுற்றுலா பயணிகள்
Subscribe to Oneindia Tamil

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த 3 மாதங்களில் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். சீசன் முடிந்த பின்னர் செப்டம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் களை கட்டுவது வழக்கம்.
கடந்த ஆண்டு முழுவதும் இங்கு சீசன் களை கட்டியிருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அருவியி்ல் தண்ணீர் வரத்தின்றி பாறைகள் மட்டுமே காட்சியளித்தன.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் மட்டும் பலத்த மழை பெய்து வந்ததால் இன்று அதிகாலை முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலா பயணிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அருவியில் குளிக்க படையெடுத்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications