சங்கரன்கோவில்-சென்னை நேரடி பஸ்: முத்துச்செல்வியின் கோரிக்கையை உடனே ஏற்ற ஜெ.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விடப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது முதல்வர் ஜெயலலிதா 473 புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார். மேலும் 100 பேருந்துகளுக்கு பாடி கூண்டு கட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே, சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அப்போது ஜெயலலிதா எழுந்து, சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினர் முத்துசெல்விக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
உடனே முத்துசெல்வி கூறுகையில், கேட்டதை உடனே கொடுக்கும் அம்மாவிற்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications