கோவை வேளாண் பல்கலையில் மெஷினில் துப்பட்டா சிக்கி ஆய்வு மாணவி பலி
கோவை: வேளாண் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இருந்தபோது துப்பட்டா தாவரங்கள் அரைக்கும் மெஷினில் சிக்கியதில் மாணவி ஒருவர் பலியானார்.
நேபாள் தலைநகர் காத்மாண்டுவைச் சேர்நதவர் சி. ஸ்ரீஜனா(27). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மண் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் கடந்த 3ம் தேதி இரவு ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தாவரங்களை அரைக்கும் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. ஆய்வில் மூழ்கிய அவர் தனது துப்பட்டா மெஷினில் சிக்கியதைக் கவனிக்கவில்லை. துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிபட்டு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். ஸ்ரீஜனா எப்பொழுதுமே தனியாக ஆய்வகத்தில் ஆய்வில் ஈடுபடும் பழக்கம் உடையவர் என்பதால் இது கொலையாக இருக்க முடியாது என்று போலீசார் உறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications