விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞர்!
Subscribe to Oneindia Tamil

இந்தப் போராட்டத்தின்போது மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்க கூறி தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது தேமுதிக தொண்டர் ஒருவர் மின்கட்டண உயர்வை வாபஸ் வாங்கு என்று கோஷமிட்டபடி மேடையில் ஏறினார். கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications