சாய்பாபா கோவிலுக்கு 1.5 கிலோ தங்க மணி, 900 கிராம் தங்க குடம் காணிக்கை கொடுத்த 2 பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
ஷீரடி: ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு பக்தர்கள் இருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க மணியும், தங்கக் குடமும் காணிக்கையாக அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் உலக பிரசித்தி பெற்றது. அந்த கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியைச் சேர்நத் சாய் பாபா பக்தர் ஒருவர் 1.5 கிலோ தங்க மணி காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 900 கிராம் எடையுள்ள தங்க குடம் ஒன்றை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த மணி மற்றும் குடத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த தகவலை கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 5 ஆண்டுகளில் சாய் பாபா கோவிலுக்கு காணிக்கையாக 280 கிலோ தங்கம், 3,000 கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications