மகாராஷ்டிராவில் பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த டாக்டர் தம்பதி அந்த பெண் சிசுக்களை நாயக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்துள்ளவர்கள் டாக்டர் தம்பதியான சுந்தம் முண்டே, சரஸ்வதி முண்டே. சுந்தம் முண்டே அறுவை சிகி்ச்சை நிபுணர். அவரது மனைவி சரஸ்வதி மகப்பேறு மருத்துவர். அவர்கள் தங்கள் மருத்துவமனையில் சட்டவிரோதமாக வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவ்வாறு பரிசோதனை செய்யும்போது அது பெண்ணாக இருந்தால் அந்த கருவைக் கலைத்தும் வந்தனர். ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக கலைக்கப்பட்ட கருக்களை தாங்கள் வைத்திருக்கும் நாய்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம் சந்தம் முண்டே விஜய்மாலா (28) என்ற பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்றபோது அந்த பெண் இறந்தார். விஜயமாலாவுக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர் 5வதும் பெண் வேண்டாம் என்று கருவைக் கலைக்க வந்துள்ளார். விஜயமாலா இறந்ததையடுத்து டாக்டர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஷீலா யாதவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2010ம் ஆண்டு டாக்டர் முண்டே ஆதாரங்களை அழி்க்க கலைக்கும் பெண் சிசுக்களை தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொடுப்பதை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கருவி்ல் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோனோகிராபி பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் 12 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலுமே அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உரிமம் ரத்தான பிறகும் அவர்கள் தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கிரைம் பிரிவு போலீசாருக்கு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications