சங்மா மீது செமகடுப்பில் சோனியா-சந்திக்க மறுத்தார்

நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் புயலானது மெல்ல மெல்ல மையம் கொண்டிருக்கிறது. கிழக்குக் கடற்கரை மாநிலங்களான தமிழகம் மற்றும் ஒடிசா முதல்வர்கள் உருவாக்கி வைத்த இந்த புயலானது நாட்டின் மையப்பகுதிகளை ஊடுருவி டெல்லியை மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது சூறாவளியாக டெல்லி அரசியல் உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில் எந்த சோனியா அந்நியர் என்று முழக்கம் எழுப்பி காங்கிரசிலிருந்து சங்மா வெளியேறி வந்தாரோ அதே சோனியா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க சங்மா முயற்சித்தார்.
ஆனால் தம்மை அன்னியர் என்று கூறிய சரத்பவாரை மன்னித்து ஏற்று அமைச்சர் பதவி வழங்கிய சோனியா இன்னும் செம கடுப்பில் சங்மா மீதுதான் இருக்கிறார்.
சோனியாவை சந்திக்க சங்மா அனுமதி கேட்டிருந்த நிலையில் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் சோனியா. சோனியாவால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளராக இருக்கும் சங்மாவை மற்றக் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன என்பது ஓரிரண்டு நாட்களில் தெரியவரும்.
இதனிடையே சங்மா இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்தை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு கேட்டார்.












Click it and Unblock the Notifications