இன்னொரு சத்யம் பாணி மோசடி..ரீபோக் முன்னாள் எம்.டி. மீது ரூ.8,700 கோடி மோசடி புகார்!

டெல்லியை அடுத்த குர்கான் காவல்நிலையத்தில் ரீபோக் நிறுவனம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் எம்.டி. சுபீந்தர் சிங் பிரேம் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு பகத் ஆகியோர் நிறுவன தயாரிப்புகளை திருடிக் கொண்டு போய் ரகசிய கிடங்குகளில் பதுக்கி வைத்து பல ஆயிரம் கோடி மோசடி செய்தனர் என்பது புகார்.
கடந்த மார்ச் மாதம் பக்த் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரீபோக் நிறுவனம் சார்பில் நிதிப் பிரிவு இயக்குநர் சஹீம் பதாத் புகார் மனு கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து குர்கான் போலீசார் விசாரணை நடத்தி சுபீந்தர் சிங்கும் மற்றும் பகத் செய்த மோசடிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ரீபோக் நிறுவன தயாரிப்புகளைத் திருடி பதுக்கி வைக்க 4 குடோன்களை வாடகைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி திருடப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்துக் கொண்டு இவர்கள் தனியாக சப்ளை செய்து பல ஆயிரம் கோடி லாபம் பார்த்ததும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications