நட்சத்திர ஓட்டலை தீவிரவாதிகள் தாக்கினால் எதிர்கொள்வது எப்படி? நள்ளிரவில் ஒத்திகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திர ஹோட்டலை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பது எப்படி என்பது குறித்து சென்னையில் நேற்று நள்ளிரவு ஒத்திகை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

அண்ணாசாலையில்...

சென்னை அண்ணாசாலையில் கயாத் நட்சத்திர ஹோட்டலில் நேற்று 11 மணியளவில்திடீரென தீவிரவாதிகள் நுழைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் சென்னை நகர கமாண்டோ படையினரும் எதிர்த்து சண்டையிடுவதாகவும் தகவல் பரவியது.. ஆனால் சம்பவ இடத்துக்கு பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட சென்னை நகர போலீசாரும் இதில் இணைந்து கொண்டதால் பெரும்பரபரபு ஏற்பட்டது.

ஆனால் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஒத்திகை இது என தெரியவந்தது.

மும்பையில் கடல் வழியாக ஊடுவி நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல் சென்னைக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

சென்னை நகர் மற்றும் கடற்பரப்பில் அடிக்கடி இத்தகைய தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+