பிறமொழி பாடம் எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் அல்லாத பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா 1200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ் அல்லாத பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மாணவி பவித்ரா 1200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

பிறமொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வி. பவித்ரா( சமஸ்கிருதம்) மற்றும் புதுவை செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஸ்வப்னா(பிரெஞ்ச்) ஆகிய இருவரும் 1,200க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

1,189 மதிப்பெண்கள் பெற்று 3 பேர் இரணடாம் இடத்தையும், 1,188 மதிப்பெண்கள் பெற்று 12 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ள பவித்ரா அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காகத் தான் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரெஞ்ச் மொழியை எடுத்துப் பயின்று 1,189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது மாணவியாக வந்துள்ள சென்னை அண்ணாநகர் ஜேசிஸ் மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆன்சி பிலிப் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் படித்த பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+