எகிபதில் புரட்சிக்குப் பின் இன்று முதல் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு
கெய்ரோ: எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை புரட்சியின் மூலம் வீழ்த்தப்பட்ட பிறகு இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
எகிப்தில் 32 ஆண்டுகாலம் ஹொஸ்னி முபாரக் ஆட்சி நடத்தினார். அவரது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனநாயக வழியில் பொதுமக்கள் போராடினர். கடந்த பிப்ரவரி மாதம் முபாரக்கின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் சார்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய தேர்தலில் முன்னாள் பிரதமரும், விமானப்படை முன்னாள் கமாண்டருமான அகமது ஷபீப், முன்னாள் மந்திரி அமர் மூசா, முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி, சுதந்திர இஸ்லாமிய கட்சியை சேர்ந்த அப்துல் முனீம் அப்துல் போடக் உள்ளிட்ட 13 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
அவர்களில் முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி மற்றும் சுதந்திர இஸ்லாமிய கட்சியை சேர்ந்த அப்துல் முனீம் அப்துல போடக் குக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் வாக்கு சாவடிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நாளை வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்த வாக்காளர்கள் 5 கோடி பேர்.
எகிப்தில் ஜனநாயக வழியில் 60 ஆண்டுகளுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் மக்கள் வாக்களிப்பின் மூலமதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 32 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த முபாரக்கோ ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்.
எகிப்தில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவை சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்ற்ன.












Click it and Unblock the Notifications