கூடங்குளம்: பேரிடர் மேலாண்மைப் பயிற்சி 'ஓவர்'-விரைவில் மின் உற்பத்தி!
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டால் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து அணு உலைகளில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்த உடன் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியுடன் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் மின் உற்பத்தியை தொடங்க அனைத்து வகையிலும் கூடங்குளம் அணுமின் நிலையம் தயாராகி விட்டது. மின் உற்பத்தியை தொடங்கும் முன்பு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் யுரேனியம் நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கும்.
இதனையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள நக்கனேரி கிராமத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இதற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது மக்களை எப்படி பாதுகாப்பது, மக்களை எப்படி வெளியேற்றுவது, என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து நக்கநேரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
இதற்காக ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவடைந்துள்ள நிலையில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்பினால் மின் உற்பத்தி விரைவில் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொய்யான பயிற்சி-உதயக்குமார் கண்டனம்
இதனிடையே இது பொய்யான பேரிடர் மேலாண்மை பயிற்சி என்று கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்படுவது குறித்து எந்தவித முன் அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.
நக்கனேரி கிராமத்தில் 100 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அதுவும் படிக்காத பாமர மக்கள்தான் இருந்துள்ளனர். இவர்கள் நடத்திய பேரிடர் மேலாண்மை பயிற்சி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்த பயிற்சியை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்றார்.
பெரிய கவலையில் இலங்கை:
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்தியாவுடன் அணுவிபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ள இலங்கை விரும்புகிறது. இதன் ஒருபகுதியாகவே இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்த உள்ளனர். தில்லியில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உடன்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என்று இலங்கையின் அணுசக்தி ஆணைய தலைவர் ரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications