தூத்துக்குடி-விதிகளை மீறிய 37 தனியார் பள்ளி வாகனங்களுக்கு அபராதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிமுறை மீறிய 37 தனியார் பள்ளி வாகனங்களுக்கு போக்குவரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி விதிமுறை மீறும் பள்ளி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல், ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமா பர்வின் ஆகியோர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 37 தனியார் பள்ளி வாகனங்களை மடக்கி விசாரணை நடத்தினர். பின்பு அந்த வாகனங்கள் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மேலும், வாகன உரிமை இல்லாமல் இயங்கிய பள்ளி பேருந்து ஒன்றும், 2 பள்ளி வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications