போலியோ சொட்டு மருந்து விஷம், இஸ்லாத்திற்கு எதிரானது: இப்படியும் ஒரு பிரச்சாரம்!
இஸ்லாமாபாத்: போலியோ சொட்டு மருந்து கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், சொட்டு மருந்து கொடுக்க வருபவர்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானில் ஒரு பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இது குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானின் முசாபர்கார் பகுதியில் உள்ள கான் பர் பக்கா ஷெருக்கு உள்ளூரைச் சேர்ந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு சென்றது. அது அங்குள்ள பொதுமக்களை அணுகி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு்க கொண்டது.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மத தலைவரான மௌலவி இப்ராஹிம் சிஸ்தி அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து விஷம் என்றும், அதை குழந்தைகளுக்கு கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அறிவித்தார். மேலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு யாரையாவது வற்புறுத்தி மருந்து கொடுத்தால் அவர்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார்.
இதையடுத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழுவினர் யாருக்கும் மருந்து கொடுக்காமலேயே முசாபர்கார் நகருக்கு திரும்பினர். அந்த குழுவினர் இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை தலைமை அதிகாரிக்கு தெரிவித்தனர். அவர் உடனே மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
போலியோ மருந்து கொடுத்து மக்களை மலட்டுத் தன்மை உடையவர்களாக்க மேற்கத்திய நாடுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி மதத் தலைவர் தங்களை நம்ப வைத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் துணையுடன் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு கான் பர் பக்கா ஷெருக்கு மீண்டும் சென்றது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications