பிரணாப் முகர்ஜிக்கு முலாயம்-மாயாவதி ஆதரவு: பாஜக, இடதுசாரிகளும் ஆதரவு?
அதே போல பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
தம்மை மமதா நிராகரித்தபோதே உடனடியாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மூத்த இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார் பிரணாப் முகர்ஜி. இடதுசாரிகளும் அமைதி காத்து வந்தனர்.
கடந்த காலங்களில் தேசிய அரசியல் இடதுசாரிகள் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருந்ததைப் போல தாமும் உருவெடுக்க முடியும் என்று மமதா கருதியிருந்தார். இப்போது மமதாவின் இடம் காலியாவதால் மீண்டும் காலச்சக்கரம் இடதுசாரிகளிடமே திரும்பியிருக்கிறது. பிரணாப்பை இடதுசாரிகள் ஆதரிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது
தேஜகூ ஆலோசனை
பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் கூடி ஆலோசனை நடத்துகிறது. மேலும் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜூடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
அனேகமாக குடியரசு துணைத் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு பிரணாப்பை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கலாம் என்று தெரிகிறது.
முலாயமுடன் பேச்சு
பிரணாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அதே போல பிரதமரும் பேசினார். இதையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு சமாஜ்வாடி ஆதரவளிக்க முன் வந்துள்ளது. இத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.
பகுஜன் ஆதரவு
இதனிடையே லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
கலாம் போட்டியில்லை
இதனிடையே தமக்கு ஆதரவு குறைந்து வருவதால் தாம் தோற்று விடுவோமோ எனக் கருதும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிடத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.