ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதியின் எச்சரிக்கையையும் மீறி ஆஜராக சசிகலா
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதியின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துவிட்டார். ஆனால் பல மாதங்களாக நீண்ட இழுத்தடிப்புடனேயே சசிகலா பதில் அளித்து வருகிறார்.
ஜூன் முதல்வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சசிகலாவால் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மருத்துவர் சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தியிருந்தார். மேலும் இன்றைய விசாரணையின் போது சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை. இதில் நீதிபதி மல்லிகார்ஜூனையா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.