தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்ட 8ம் வகுப்பு மாணவி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்ட 13 வயது பள்ளி மாணவி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவரது மகள் பிரியா (எ) சிவப்பிரியா(13). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி சிவப்பரியா அவரது பெற்றோர்களிடம் பரோட்டா வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். மகள் ஆசைப்பட்டு கேட்பதால் அவர்களும் பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அதை சிவப்பிரியா ஆசையாக சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடநலக்குறைவு ஏற்பட்டது. அடுத்து சில நிமிடங்களில் அவர் இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சிவப்பிரியாவுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தொண்டையில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது என்றும், அதனால் பரோட்டா சாப்பிடும்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications