பிரமலைக்கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு-முதல்வருக்கு சேதுராமன் நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரமலைக்கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் என்.சேதுராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரமலைக்கள்ளர் இன மக்கள் பயனடையும் வகையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலைக் கள்ளர் வகுப்பை சார்ந்த மக்களின் நலனுக்காக 24 மேல்நிலைப் பள்ளிகள், 25 உயர் நிலைப்பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகள், 211 ஆரம்ப பள்ளிகள் என்று மொத்தம் 285 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 37,556 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கிற முக்குலத்தோர் சமுதாய மக்களில் பிரமலைக் கள்ளர் இன மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் சீரமைப்பு நலப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 80 நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் முடங்கி போகும் நிலையில் இருந்த இப்பள்ளிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மீண்டும் மறுசீரமைப்பு செய்து, கள்ளர் இன மக்களின் மாணவ, மாணவியர் கல்வி பயலும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+